Friday, October 24, 2008

ஆத்தா..... நான் பிளாகராயிட்டேன்......

எல்லோருக்கும் வணக்கமுங்கோ.!!!

நானும் பிளாகராயிட்டேன். ரொம்ப நாளா இந்த தமிழ் வலைப்பதிவு உலகத்தை சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தேன். கடைசியா நானும் எதையாவது எழுதி தள்ளலாம்ன்னு ஒரு முடிவுக்கு வந்து ஒரு பிளாக் ஆரம்பிச்சிருக்கேன்:) (நீயுமாடா.. அப்படின்னு நீங்க யோசிக்கறது தெரியுது..)

என்ன எழுதறதுன்னு தெரியல:( ஆனா களத்தில இறங்கினதுக்கு அப்பறம் பயந்தா முடியுமா?? என்ன சொல்றீங்க.???????

கதை (சிறுகதை, பெருங்கதை, சொந்த கதை, சோககதை, அறிவியல் புனை கதை அல்லது கூட்டு,அவியல், பொரியல் கதை) , அரசியல் (அமெரிக்கா அரசியல், மார்க்சிச அரசியல், இந்திய அரசியல், மத அரசியல், சிறுபான்மை பெரும்பான்மை அரசியல் தமிழக அரசியல், பெரியார், வலைப்பதிவு அரசியல், போலிகளின் அரசியல்), இலக்கியம் (கவிதை, கவுஜ, நுண்ணரசியல், ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், பெண்ணியம்), கட்டுரை (எதிர்த்து கட்டுரை, ஆதரித்து கட்டுரை), சினிமா (மொக்க படம் முதல் மகாமொக்கை படம் வரை)........... எவ்ளோ பாக்கிறோம் ஒரு நாளைக்கு.... எல்லாத்தையும் கலந்து கட்டி அடிக்கலாம்........:))))))))

ஆனா அவ்ளோ அறிவுக்கு நான் எங்கே போவேன்:((.... எதையாவது ஆனா எழுதனும்.....:))) confidence..... :))

கொஞ்சமாவது பின்னூட்டம் போட்டு மானத்தை காப்பாத்துங்க....:))) அப்பறம் நாள பின்ன வலைபதிவர் சந்திப்பில தலைகாட்ட முடியாது....:))

17 comments:

கோவி.கண்ணன் said...

//"ஆத்தா..... நான் பிளாகராயிட்டேன்......"//

வாழ்த்துகள் !

இது கடைசி வரிக்கு !
:)

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள்! வாங்க ஜோதியில் ஐக்கியமாகுங்க

சதங்கா (Sathanga) said...

வாங்க. வாங்க. நிறைய எழுத வாழ்த்துக்கள்.

//கொஞ்சமாவது பின்னூட்டம் போட்டு மானத்தை காப்பாத்துங்க....:))) //

பின்னூட்டம் வந்தா தான் தொடருவேன் அப்படிங்கற மாதிரி இருக்கு. இதை எதிர்பார்த்து எழுத ஆரம்பித்தால், நிச்சயமாக தொடரமுடியாது. அதனால் எழுதுவதில் நிறைய கவனம் செலுத்துங்க. படிப்பவர்கள் கண்டிப்பாகப் படிப்பார்கள்.

SurveySan said...

;)

thamizhparavai said...

எல்லாம் சர்தான்பா...இந்த் வேர்டு வெரிபிக்கேஷனப் புடிச்சு தொங்கினுக்கிறியே..அத்த முத அறுத்தெரி.அப்பலிக்க ஒன் பொட்டி புல்லா பின்னூட்டம்தான்.
வருக...வருக....

கிரி said...

//கதை (சிறுகதை, பெருங்கதை, சொந்த கதை, சோககதை, அறிவியல் புனை கதை அல்லது கூட்டு,அவியல், பொரியல் கதை) , அரசியல் (அமெரிக்கா அரசியல், மார்க்சிச அரசியல், இந்திய அரசியல், மத அரசியல், சிறுபான்மை பெரும்பான்மை அரசியல் தமிழக அரசியல், பெரியார், வலைப்பதிவு அரசியல், போலிகளின் அரசியல்), இலக்கியம் (கவிதை, கவுஜ, நுண்ணரசியல், ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், பெண்ணியம்), கட்டுரை (எதிர்த்து கட்டுரை, ஆதரித்து கட்டுரை), சினிமா (மொக்க படம் முதல் மகாமொக்கை படம் வரை)........... எவ்ளோ பாக்கிறோம் ஒரு நாளைக்கு.... எல்லாத்தையும் கலந்து கட்டி அடிக்கலாம்........:))))))))//

உங்களுக்கு பிளாகர் ஆவதற்கு முழு தகுதி இருக்கு :-)))))))

வாழ்த்துக்கள்

இளங்கோ said...

நன்றி கோவி.கண்ணன் அண்ணாச்சி.... எனக்கு முதல் பின்னூட்டமே பெரிய ஆளு பின்னூட்டம்....
உங்களோட புது பதிவர் பதிவுகள் படிச்சிருக்கேன்.....:)))

இளங்கோ said...

வாங்க தமிழ் பிரியன் அண்ணாச்சி..... நன்றி....

இளங்கோ said...

வாங்க சதங்கா அண்ணாச்சி. பின்னூட்டம் போட்டீங்கனா எனக்கு கொஞ்சம் உந்துதலா இருக்கும் இருக்கும்னு சொன்னேன்.

இளங்கோ said...

வாங்க SurveySan அண்ணாச்சி... நன்றி.

இளங்கோ said...

வாங்க தமிழ்ப்பறவை. நன்றி.
Word verification ஐ எடுத்து விட்டேன்.

இளங்கோ said...

வாங்க கிரி அண்ணாச்சி.
மெய்யாலுமேவா..
நன்றி..

Anonymous said...

uruppudaama poo....
eththanai naalaikkunnu paappom

குட்டிபிசாசு said...

அப்படித்தான் காப்பாத்தாம உட்டுவமா?

வாழ்த்துக்கள்

நல்லதந்தி said...

வருக!வாழ்க!வளர்க!

குசும்பன் said...

ரைட்டு :)

வாழ்த்துக்கள்!

☀நான் ஆதவன்☀ said...

நானும் காப்பாத்திட்டேன் உங்க மானத்தை....
வாழ்த்துக்கள்.